Home இலங்கை இலங்கை – இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல்

இலங்கை – இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல்

by admin

கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது  இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய  மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்றையதினம்  வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வடங்கள்  குறித்து கலந்துரையாடப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மாரப்பனவுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தனது ருவிற்றர்  பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேநேரம்  நேற்யைதினம்    பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More