Home இலங்கை புதிய அரசியல் யாப்பு இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் – சம்பந்தன்

புதிய அரசியல் யாப்பு இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் – சம்பந்தன்

by admin


புதிய அரசியல் யாப்பு இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டுமென இரா சம்பந்தன்  சம்பந்தன்  இந்திய வெளிவிவகார அமைச்சரான சுஸ்மா சுவராஜிடம் தெரிவித்துள்ளார்.

ஆர்.சம்பந்தன்   மற்றும்   பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஸ்மா சுவராஜை   சந்தித்துக் கலந்துரையாடிய போதே சம்பந்தன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது தற்போதைய புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில்   தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்   புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும், இதனை மேலும் இழுத்தடிக்கப்படலாகாது எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனெவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய  சம்பந்தன்   அந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் காலதாமதம் ஏற்படாத வகையில் அரசியலமைப்பு யாப்பின் வரைவானது இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக அது சர்வசன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கமானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தினை நிறைவேற்றுவதனை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சரை இரா.சம்பந்தன்  கேட்டுக் கொண்டார்.

இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீள் உறுதி செய்த வெளிவிவகார அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டு வருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்குமெனவும் எடுத்துக் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More