உலகம் பிரதான செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் பதிவாகியுள்ளது – சவூதி மன்னர்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஜிஸ் அல் சவுத் (  Salman bin Abdulaziz Al Saud ) தெரிவித்துள்ளார். மக்காவில் ஹஜ் யாத்திரை தொடர்பில் உலகத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய போது இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புனித நகரங்களை அழிப்பதற்கு பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கடவுளின் அருளும் மக்களின் ஒத்துழைப்பும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். சவூதியின் மக்காவிற்கு செல்லும் யாத்ரீகர்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.