Home இலங்கை சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து இன்று தீர்மானம்

சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து இன்று தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்ல நெலும்பொக்குன வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது  குறித்து இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையிலானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனால் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென   தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் கூடி, சரத் பொன்சேகா தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் பங்கேற்ற படைவீரர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் போன்று முடிந்தால் சரத் பொன்சேகாவிற்கு எதிராகவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துக் காண்பிக்கப்பட்டும் என பிரசன்ன ரணதுங்க சவால் விடுத்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More