Home இலங்கை  உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் -அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

 உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் -அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by admin

 

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா்.

ஏப்ரல் 21, 2019 அன்று  இலங்கையின் பல இடங்களில்  இடம்பெற்ற  குண்டுவெடிப்புகளில்   260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தமையும்   குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More