உயிர்த்த ஞாயிறு தினமான இன்று (20) ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். , காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படும் என பதில் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்