Home இலங்கை இராணுவத் தளபதியை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் பங்களாதேஸ் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்துள்ளனர்.

இராணுவத் தளபதியை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் பங்களாதேஸ் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்துள்ளனர்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை  நேற்றையதினம் சந்தித்துள்ளார்.  இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற  இந்த சந்திப்பின் போது   பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும்  இதன் போது அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும்  கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை  இலங்கைக்கான பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ்  அஸ்லாம் பேர்விசும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்றையதினம்      இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளாா்.

அத்தோடு ஸ்லாம் பேர்விஸ்   கடற்படைத்தளபதி வைஸ் அடமிரல் ட்ரவிஸ் சின்னையாவையும் கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.  . இரண்டு வருடங்களாக இலங்கைக்கான பங்களாதேஸ் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய  பின்   மீண்டும் பங்களாதேசத்திற்கு செல்லும் நிலையில்   இவா்களை  சந்தித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கையின் கடற்படை தனபதி மற்றும் இராணுவத் தளபதிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாதுகாப்பு  துறை அதிகாரிகள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More