Home இலங்கை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன் வடக்கில் பிரதேச சபைகள் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் – டக்ளஸ் :

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன் வடக்கில் பிரதேச சபைகள் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் – டக்ளஸ் :

by admin

வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டுமென  பாராளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் நகர சபைகளாக (பட்டின சபைகளாக) இருந்த சங்கானை, சுன்னாகம், காங்கேசன்துறை, நெல்லியடி, பண்டதரிப்பு, உரும்பிராய், மானிப்பாய், ஊர்காவற்துறை, ஆகியனவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நகரங்கள் 1989ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்துடன், பட்டன சபைகள் என்ற அந்தஸ்த்தை இழந்து பிரதேச சபைகளாக மாற்றம் பெற்றன.

கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த குறிப்பிட்ட பத்து பிரதேசங்களில் சுன்னாகம், சங்கானை, நெல்லியடி, மானிப்பாய், ஆகிய பிரதேசங்கள் பாரிய நகரங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆகவே இந்த நகரங்களின் வளர்ச்சியை கவனத்தில் எடுத்து அச்சபைகளை நகர சபைகளாக தரம் உயர்த்தி அதற்குரிய அந்தஸ்த்தும் கொடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் தலை நகராகவும், கல்வி, வர்த்தம், விவசாயம், கைத் தொழில் மையங்கள் போன்ற செயற்பாடுகளின் மையமாகவும் கிளிநொச்சி நகரம் வளர்ச்சி பெற்றிருப்பதால், கிளிநொச்சி பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்த வேண்டும் எனவும்  நகர சபையாக தரம் உயர்த்தப்படும்போதுதான், அச்சபையின் நிர்வாகத்தையும், முகாமைத்துவத்தையும் சிறப்பாக செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோலவே முல்லைத்தீவு மாவட்டத்தின் வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் கவனத்தில் கொண்டு முல்லைத் தீவு பிரதேச சபையையும் நகர சபையாகத் தரம் உயர்த்தி நகரில் வாழும் மக்களுக்கு அச்சபை சிறப்பான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும் தெரிவித்தார்.

இதைத் தவிர வட மாகாணத்தில் 4 பிரதேசங்கள் பிரதேச செயலகங்கள் அமையப்பெற்றுள்ளபோதும், பிரதேச சபைக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல் இருக்கின்றன. அவையாவன, யாழ்ப்பாணம் வடமாராட்சியில், மருதங்கேணி, கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான், மன்னாரில் மடு என்பவையாகும்.

இந்த 4 பிரதேசங்களுக்கும் தனியான பிரதேச சபைக் கட்டமைப்பு இன்மையால் அடிமட்ட கிராமிய அபிவிருத்தியைக் கூட முன்னெடுப்பது அப்பிரதேசத்தில் கடினமான காரியமாக இருக்கின்றது.   எனவே இந்த 4 பிரதேசங்களுக்கும் பிரதேச சபைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குறைபாடுகள்; உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாக் கப்படுவதற்கு முன்னார் நிவர்த்திக்கப்பட வேண்டுடெமனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More