Home இலங்கை நல்லாட்சி அரசே மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படாதே – ஏறாவூர் மக்கள் போராட்டம்

நல்லாட்சி அரசே மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படாதே – ஏறாவூர் மக்கள் போராட்டம்

by admin


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று   பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றுள்ளது.

ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எந்தவித மாற்றமும் இன்றி 2016 ஆண்டுக்கு முன்பிருந்த மாதிரி  நிர்வகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும்  செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீநாத்திடம் கையளித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More