Home உலகம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவில் புகலிம் கோரிய ஒரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்பட உள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி அகதிகள்; இவ்வாறு அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்.

பபுவா நியூகினி மற்றும் நவ்ரூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 அகதிகள் இவ்வாறு அமெரிக்காவில் குடியேற்றப்பட உள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் இது தொடர்பிலான தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஒபாமா அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்பட உள்ளனர்.

1250 அகதிகளை குடியேற்றுவதற்கு அமெரிக்கா இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More