Home இலங்கை அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையிடம் கையளிப்பு:-

அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையிடம் கையளிப்பு:-

by admin

அரசியலமைப்பு பேரவையின் செயற்குழுவினால் புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை பிரதமரினால் அரசியலமைப்பு பேரவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை அந்த அறிக்கை புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்குழுவின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது.

அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 06 உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் கருத்தறியும் லால் விஜயநாயக்கவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை பின்னர் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட உள்ளதுடன், அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More