Home இலங்கை 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் உண்மைத் தகவல்களை வழங்கவில்லை – குற்றச்சாட்டு :-

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் உண்மைத் தகவல்களை வழங்கவில்லை – குற்றச்சாட்டு :-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் உண்மைத் தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 முதல் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் இவ்வாறு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்தனர். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சரியான தகவல்களை கடற்படையினர் வழங்கவில்லை என, குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளின் போது கடற்படையினர் மீது, குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ தசநாயக்க உள்ளிட்ட இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 9ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More