Home இந்தியா ஏர்செல்-மக்ஸ் வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை…

ஏர்செல்-மக்ஸ் வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை…

by admin

ஏர்செல்-மக்ஸ் வழக்கு தொடர்பாக, முன்னாள் இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஏர்செல்-மக்ஸ் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் பணமோசடி நடந்ததாக கூறி சி.பி.ஐ.யும், அமுலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. கார்த்தி சிதம்பரம் தனது தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சரihக இருந்தபோது, ஏர்செல்-மக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அன்னிய முதலீட்டை பெற்றபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அமுலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில், நிதிமுறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் உள்ள 1 கோடியே 16 லட்சம் ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கி வைத்தது.

இந்நிலையில், வரும் ஒக்டோபர் 4ம் திகதி வழக்கு விசாரணைக்காக அவர் நேரில் முன்னிலையாக வேண்டும் என சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More