Home இலங்கை இலங்கை தம்பதியினரை அவுஸ்திரேலியா நாடு கடத்த உள்ளது

இலங்கை தம்பதியினரை அவுஸ்திரேலியா நாடு கடத்த உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை தம்பதியினரை அவுஸ்திரேலியா நாடு கடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கோரியிருந்த இலங்கையரும் அவரது குடும்பத்தினருமே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். 39 வயதான எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற இலங்கையரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி இந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். குறித்த இலங்கையரின் மனைவி உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்க வைத்துகொள்ள பாரியளவில் செலவிட்ட போதிலும் உரிய பலன் கிடைக்கவில்லை என எரங்க தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More