Home இலங்கை மாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினரால் தொடங்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் மற்றும் தோல் உற்பத்தி மற்றும் வாடகை நிலையத்தை கடந்த  30ஆம் திகதி பிற்பகல் 04:00மணியளவில் உடையார்கட்டுப் பகுதியில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினர் தங்களுடைய முயற்சியின் படியாக இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு பிரித்தானியாவிலுள்ள ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியம்’ நிதிப்பங்களிப்பை செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, அமைப்பின் வளர்ச்சி மற்றும் சமூகத்திற்கான சேவை உள்ளிட்டவை இதன் நோக்கமாகும்.

அமைப்பின் தலைவர் திரு. பழனிச்சாமி – இராசகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்;வில், முதன்மை விருந்தினராக து.ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் அமைப்பின் செயலாளர் திரு.இராசலிங்கம் – அம்பிகைபாலன் மற்றும் அமைப்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More