Home இலங்கை சட்டவிரோத குழு வீடு புகுந்து தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத குழு வீடு புகுந்து தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீடு புகுந்து சட்டவிரோத குழு தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்;தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் கிராமத்தில் கடந்த 29ந் திகதி நடைபெற்றுள்ளது.  மதுபோதையில் எட்டுக்கு மேற்பட்டவர்கள் இரவு 9.00 மணியளவில் வீடு புகுந்த தாக்கியதில் மு.கேசவன் வயது 46 என்ற குடும்பத்தவர் தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் படுகாயமடைந்த நிலையில் அக்கராயன் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மயக்க நிலையிலேயே உயிராபத்தான நிலையில் குறித்த நபர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்;.

இந்நிலையில்  02.10.2017 பிற்பகல் 2.00 மணியளவில் மேற்படி குடும்பத்தவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக துணுக்காய்;, கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழு ஒன்றினாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More