Home உலகம்தீவிரவாதத்துடன் தொடர்புடைய விடயங்களை இணையங்களில் பார்ப்பது குற்றச்செயலாக அறிவிக்கப்படும் – அம்பெர் ரூட்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய விடயங்களை இணையங்களில் பார்ப்பது குற்றச்செயலாக அறிவிக்கப்படும் – அம்பெர் ரூட்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய விடயங்களை இணையங்களில் பார்ப்பதை குற்றச்செயலாக அறிவிக்கவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் அம்பெர் ரூட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஓரு பகுதியாகவே இந்த நடவடிக்கையை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிகாத் வெப்தளங்கள், குண்டுகளை தயாரிப்பது எப்படி என தெரிவிக்கும் வீடியோக்கள்  தீவிரவலதுசாரிகளின் பிரச்சாரங்கள்,போன்றவற்றை இணையங்களில் பார்வையிடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். இணையங்கள் மூலம் தீவிரவாதமயப்படுத்தல்  இடம்பெறுகின்ற வேகத்தை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More