Home இந்தியா இந்தியா முழுவதும் எதிர்வரும் 9-ந் தேதி முதல் 2 நாட்கள் பார ஊர்திகள் வேலைநிறுத்தம்:-

இந்தியா முழுவதும் எதிர்வரும் 9-ந் தேதி முதல் 2 நாட்கள் பார ஊர்திகள் வேலைநிறுத்தம்:-

by editortamil

IST. வரி, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் எதிர் வரும் 9 மற்றும்  10-ந் திகதிகளில் வேலைநிறுத்தம் செய்வது என அகில இந்திய பார ஊர்தி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து மகாசபை சார்பில் பல்வேறு பார ஊர்திஉரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் மோட்டார் போக்குவரத்து மகாசபை தலைவர் எஸ்.கே.மிட்டல், நிர்வாகிகள் குல்தரன்சிங் அத்வால், ரஜீந்தர் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் IST. வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More