Home இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்கிறார் DMS:-

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்கிறார் DMS:-

by editortamil


காலவரையறை அற்று நிண்டு செல்லும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என இந்துகலாசார, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ பயணமாக மட்டக்களப்பிற்கு சென்ற அமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் நிருபர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோதே இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, “73 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மேல் நீதிமன்றில் உள்ளது. அவர்களுக்கான குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரும், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கப்படுகிறது. என்னால் முடிந்தவரையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றேன். சட்டத்தினை நாங்கள் மீறி நடக்கமுடியாது. ஆனால் அவற்றினை சுலபமாக விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கிலுள்ள வழக்குகள் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் என்ன எனத் தெரியாது எனவும் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More