Home இந்தியா போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டமைக்கெதிராக தமிழக விவசாயிகள் வழக்கு

போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டமைக்கெதிராக தமிழக விவசாயிகள் வழக்கு

by admin


ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து எதிர்த்து விரைவில் நீதிமன்றில்  வழக்கு தொடருவோம் என்று தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர். டெல்லியின்   ஜந்தர் மந்தர் பகுதியில்   காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில்  ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று முன்தினம்  உத்தரவு பிறப்பித்திருந்தது.     இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

தாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம் எனவும்  பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமுல்படுத்த 28 நாட்கள் அவகாசம் இருப்பதனால்  தாங்கள் ஜந்தர் மந்தரிலேயே இருக்கிறோம் எனவும் இந்த உத்தரவை எதிர்த்து விரைவில்   வழக்கு தொடருவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More