Home இலங்கை தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – நாமல்

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – நாமல்

by admin


நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது.

இதன் போது 28பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டைய முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய அவர் உண்மையை மறைக்கும் அரசாங்க தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More