Home இலங்கை யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு கடூழிய சிறை தண்டனை

யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு கடூழிய சிறை தண்டனை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் 2 மாத கடூழிய சிறை தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தீர்ப்பளித்துள்ளார்.  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சாரதி அனுமதி பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓடி சென்றவரை ஊர்காவற்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்படுத்தப்பட்டார்.

அதனை அடுத்து குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , 2 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் , ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் , 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More