Home இந்தியா காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் குடியிருப்புமீது பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கியதாக இந்தியா குற்றச்சாட்டு!

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் குடியிருப்புமீது பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கியதாக இந்தியா குற்றச்சாட்டு!

by admin

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில்  பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய நிலைகள் மீதும், பொதுமக்களின் குடியிருப்புகளின் மீதும் வலிந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜம்மு காஷ்மீரில் எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும்  போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றி வரும் நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது

இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் கேஜி பிரிவில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிலைகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூட்டினை  பாகிஸ்தான் படைகள் நடாத்தியுள்ளதுடன், எறிகணை  தாக்குதலை மேற்கொண்டதாகவும் இந்திய இராணுவத் தரப்பு கூறுகின்றது. இதேவேளை இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக பதில் தாக்குதல் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாகவும் இந்திய இராணுவத் தரப்பு மேலும் குறிப்பிடுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More