Home இலங்கை கடந்த காலங்களில் இவ்வாறு செய்திருந்தால் வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப்பர் – கபீர் ஹாசீம்

கடந்த காலங்களில் இவ்வாறு செய்திருந்தால் வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப்பர் – கபீர் ஹாசீம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களுக்கு அமைச்சர்கள் அழைக்கப்பட்டிருந்தால், ஆணைக்குழுவின் பிரதானிகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப்பர் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த காலத்தில்  அமைச்சர்களை விசாரணைக்கு என ஆணைக்குழுக்களுக்கு அழைத்திருந்தால், அவ்வாறு அழைத்த ஆணைக்குழு பிரதானிகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப்பர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பினை அடுத்து மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More