Home இலங்கை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்:-

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்:-

by editortamil

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதில் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தமையானது மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தநிலையில் குறித்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More