Home இலங்கை கணவனுக்கு கத்திக்குத்து – மனைவியின் நகைகள் கொள்ளை:-

கணவனுக்கு கத்திக்குத்து – மனைவியின் நகைகள் கொள்ளை:-

by editortamil

கணவன் மீது கத்திக் குத்து நடாத்தி மனைவியின் தங்க ஆபரணங்களை அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் அக்கராயனில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு    அக்கராயன் கிழக்குப் பகுதியில் உள்ள 451 வயதான கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணமூர்த்தி  என்பவரின் வீட்டில் குறித்த நம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தவர் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது இருவர் வீதியில் வந்த இருவர்  குறித்த குடும்பத்தவரின் பெயரைக் கூறி அழைத்த போது  அவர் வீட்டின் வாசலுக்கு அருகில் சென்றபோது குடும்பத்தவர் மீது கத்திக் குத்து நிகழ்த்தப்பட்டுள்ளது.

குடும்பத்தவரின் அலறலைக் கேட்ட மனைவி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த போது கத்திக் குத்து நிகழ்த்திய இருவரில் ஒருவர் மனைவியின் கையைப் பிடிக்க இன்னொருவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் அறுத்தெடுத்தனர்.

தாக்குதல் நடாத்தியவர்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகள், கதவுகளையும் சேதப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் அவலக் குரலை எழுப்பியதை அடுத்து இருவரும் வந்த மோட்;டார் சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அக்கராயன், கிளிநொச்சி காவல்துறையினருக்கு  தகவல் வழங்கியதை அடுத்து  காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் நடாத்திய இருவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கான குடும்பத்தவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றாh். தாக்குதல் நடாத்தியவர்கள் அக்கராயன் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டி உள்ளனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More