Home இந்தியா ஹார்வேட் பல்கலையில் தமிழ் துறை நிறுவுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபா நிதி உதவி!

ஹார்வேட் பல்கலையில் தமிழ் துறை நிறுவுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபா நிதி உதவி!

by admin


உலகப் புகழ்பெற்ற ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சரின்  விருப்பத்திற்கு இணங்க இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுகையில் ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவ  நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை முன்னிட்டே இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்மூலம் அமெரிக்காவில் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட ஆய்வுகள் நடைபெறும் எனவும், நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை பதிப்பித்தல் போன்ற பணிகள்  இடம்பெறும் எனவும் தமிழக முதலமைச்சர்  குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தமிழ் மொழியின் வளம் உலகறியும் நிலை ஏற்படும்   பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவ சுமார் 30 கோடி நிதி உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More