Home இந்தியா தமிழகத்தில் மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தூக்குக்கயிறுடன் வந்த விவசாயிகள்!

தமிழகத்தில் மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தூக்குக்கயிறுடன் வந்த விவசாயிகள்!

by admin


தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் தூக்குக் கயிற்றுடன் வந்தமையால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. தமக்கான பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையை வழங்காமையைக் கண்டித்தே விவசாயிகள் இவ்வாறு மண்ணெண்ணை கான், நஞ்சு மருந்துக் குப்பிகள் மற்றும்  தூக்குக் கயிற்றுடன் வந்தனர்.

இதேவேளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த அனைவரையும் காவல் துறையினர் சோதனை செய்தனர். இதன்போது மண்ணெண்ணெய் கானுடன் வருகை தந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து விவசாயி ஒருவர் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டமையால் பரபரப்பை ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவி்லலை என்றால் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் நாகை விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தஞ்சை மாவட்டத்தில் பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கபட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் விவசாயிகளின் பிரச்சினை உக்கிரம் பெற்று வரும் நிலையில் அறுவடையின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More