Home இலக்கியம் மனிதம் – சி. ஜெயசங்கர்

மனிதம் – சி. ஜெயசங்கர்

by admin

மரங்களின் மனிதம்
மரங்கள் அறிவதில்லை
மனிதர்கள் தம்மைக் கண்டு அச்சமுறுவதை
மரங்கள் அறிவதில்லை
மனிதர் ஆதிக்கம் நிலைநாட்ட
தம்மை வளர்த்து வருவதை
மரங்கள் அறிவதில்லை
தம்மைத் துளிரிலேயே இல்லாதாக்கிவிடும்
மனித அச்சத்தின் பின்புலங்களை
மரங்கள் அறிவதில்லை
மரங்கள் அறிவதில்லை
இவை எதையுமே மரங்கள் அறிவதில்லை
ஆயினும் ஆயினும் மரங்கள்
குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி
மனிதர்கள் ஆறவும் அமரவும்
குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி

சி. ஜெயசங்கர்
31.10.2017

இலங்கை என்பது எம் தாய்த் திருநாடு

மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை
உணர்வும் அறிவும் கலந்தவை
விருட்சங்கள் அழகியவை பசுமை நிறைந்தவை
குளிர்மையும் நிழலும் தருபவை

முட்சிறகுகள் விரிக்கும் மனிதப் புத்தியில்
இயல்பு கெட்டுத் திரிந்தன
மொழிகளின் விருட்சங்களின் இருப்பு

சிங்களம் மொழிகளின் அரசன்
கித்துள் மரங்களின் அரசனாயிற்று

மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை
உணர்வும் அறிவும் கலந்தவை
விருட்சங்கள் அழகியவை பசுமை நிறைந்தவை
குளிர்மையும் நிழலும் தருபவை

*ஈழத்துப் பாடலொன்றி முதல்வரி

சி. ஜெயசங்கர்
31.10.2017

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More