Home இலங்கை மனித உரிமை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் – பிரதமர்

மனித உரிமை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனித உரிமை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மனித உரிமை செயற்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டில் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் கூடுதல் சிரத்தை எடுத்தக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். சில ஊடகங்கள் மனித உரிமை விவகாரங்கள் குறித்த செய்தி அறிக்கையிடலின் போது அரசியலை மட்டுமே கருத்திற் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளாகள் கொல்லப்பட்டமை, ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல நேரிட்டமை தொடர்பிலான விடயங்களை ஊடகங்கள் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More