Home இந்தியா சென்னையில் அறுந்திருந்த மின்கம்பியை மிதித்த இரு சிறுமிகள் பலி!

சென்னையில் அறுந்திருந்த மின்கம்பியை மிதித்த இரு சிறுமிகள் பலி!

by admin

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் கொடுங்கையூரில் அறுந்திருந்த மின்கம்பியை மிதித்த இரு சிறுமிகள் பரிதாபகரமாக பலியடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த மகா, பாவனா என்ற சிறுமிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர். எதிர்பாராதவிதமாக அறுந்து காணப்பட்ட மின்கம்பியை மிதித்த சிறுமிகள் மின்சாரம் தாக்கிய நிலையில் படுகாயங்களுடன் சென்னை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மருத்துவமனையை முற்றுகையிட்டு சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வேளை இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மின்சாரத்துறை அதிகாரிகள் மூவர் உட்பட எட்டுப் பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More