Home இலங்கைஅவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு வந்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு வந்துள்ளார்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அவர் இந்த பயணத்தினை  மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 7.10 மணியளவில் அவர் இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பிரதமர் டர்ன்புல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்க உள்ளார்.

டர்ன்புல் இலங்கையில் நான்கு மணித்தியாலங்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More