Home இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்..

by editortamil

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை அரசாங்கம் விருப்பத்துடன் மக்களுக்கு வழங்கவில்லை எனவும் தேர்தலை மிகவும் பிற்போட்டுவிட்டு இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ராஜபக்‌ஷ அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்களின் கருத்துக்கணிப்பாக இந்தத் தேர்தலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More