Home இலங்கை இலங்கை யுத்த வாகனங்கள் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது

இலங்கை யுத்த வாகனங்கள் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை யுத்த வாகனங்கள் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர், அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் யுத்த வாகனங்கள் கொழும்புத் துறைமுகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த யுத்த வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கொழும்பு துறைமுகத்திற்கு நேரில்  சென்று பார்வையிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றுதல், தாக்குதல் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு யுத்த வாகனங்கள் அடங்கிய 55 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More