Home இலங்கை ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் இந்திய உறவுகளை பாதிக்காது

ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் இந்திய உறவுகளை பாதிக்காது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னமானது இந்திய உறவுகளை பாதிக்காது என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம், இந்திய இலங்கை உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் இந்தியா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More