Home இலங்கை நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

by admin

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது  தீபத்தை ஏற்றி அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வடக்குமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் க.அருந்தவபாலன் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் நகர இளைஞர் கழக தலைவர் ஞா.கிஷோர் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More