Home உலகம் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் நெருக்கடி

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் நெருக்கடி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. பசியினாலும், தங்குமிட வசதியின்மையினாலும் வாழ்ந்து வரும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்கு போதியளவு நிதி கிடைக்கப் பெறாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எங்கு அதிகளவு நிதி தேவைப்படுகின்றதோ அங்கு நிதியை அனுப்பி வைப்பதில் தொண்டு நிறுவனங்கள் சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றன.

தொண்டு நிறுவனங்களின் நிதியை பயங்கரவாதிகள் அல்லது குற்றவாளிகள் பயன்படுத்துவதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More