Home உலகம் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்பு….

மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்பு….

by editortamil

அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்ற நிலையில் இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்துவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு சீனாவும் ரஷ்யாவும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.

இந்தநிலையில் வரும் கோடை காலத்துக்கு முன்பாக அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புகள் உள்ளன எனவும் இது 3-ம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்க ராணுவத்தின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட தளபதி ரிச்சர்ட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வடகொரியாவுடன் போர் மூண்டால் என்னென்ன விளைவு கள் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது எனவும் அநேகமாக இந்தப் பிரச்சினைக்கு வரும் கோடை காலத்துக்கு முன்பாக தீர்வு காணப்படும் எனவும் மற்றுமொரு ஓய்வுபெற்ற சிரேஸ்ட தளபதியான பேரி மெக்காப்ரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More