Home இலங்கை ஆட்கடத்தல் – எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு

ஆட்கடத்தல் – எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு

by admin


இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக  சட்டம் ஒழுங்கு  அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.  அத்துடன்  சிறப்பு நடைமுறையொன்றை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்தே மேற்படி    சட்ட ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்   இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது எனவும்  இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் முகமாக    விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More