Home இலங்கை இணைப்பு 2 -பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளராக சனத் பூஜித

இணைப்பு 2 -பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளராக சனத் பூஜித

by admin


குளோபல் தமிழ் செய்தியாளர்

பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளராக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளார். நாளை செவ்வாயக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளராக கடமையாற்றி வந்த ஜெனரல் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றைய தினம் கல்வியமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளதால் பதில் ஆணையாளராக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

Nov 14, 2017 @ 12:58

பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார். பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற சில முறைகேடுகளுடன் இந்த ஆணைணயாளருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More