Home இலங்கை கிந்தோட்டை அனர்த்தம் – 19 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டனர்:-

கிந்தோட்டை அனர்த்தம் – 19 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டனர்:-

by editortamil


காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்வத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கிந்தோட்டை பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சிலர் காயடைந்திருந்ததுடன், பல வீடுகளும் வியாபார தலங்களும் கடுமையாக சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More