Home இலங்கை வடக்கின் முக்கிய இராணுவ முகாம்கள் மூடப்படாது – சரத் பொன்சேகா

வடக்கின் முக்கிய இராணுவ முகாம்கள் மூடப்படாது – சரத் பொன்சேகா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கின் முக்கிய இராணுவ முகாம்கள் மூடப்படாது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கின் மிக முக்கியமான இராணுவ முகாம்கள் மூடப்படாது எனவும், படையினர் தொடர்ந்தும் முகாம்களில் நிலைநிறுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இராணுவத்தினர் நீக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கினைப் போன்றே வடக்கு கிழக்கிலும் படையினரின் பிரசன்னம் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் நெகிழ்வுப் போக்கைப் பின்பற்றாது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More