Home இலங்கை சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு சிறை

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு சிறை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியும் , 06 இலட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் , 10 தண்ட பணம் வழங்க வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்.காவல்துறைப் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை வன்புணர்ந்து தாயாக்கியமை தொடர்பில் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்பையில் , குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இளைஞருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யபப்ட்டது. அதன் அடிப்படையில் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தண்டனை தீர்ப்புக்கு திகதியிடப்பட்டது.

அதன் போது குறித்த வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதாக எதிரிக்கு எதிராக மரபணு அறிக்கையை முன்வைத்தார்.  அதேவேளை எதிரி மன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி சார்பில் கருணை மனுவை மன்றில் முன் வைத்தார்.

அதனை தொடர்ந்து , சிறுமியை வன்புணர்ந்த குற்ற சாட்டுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் தவறின் , இரண்டாண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தவறின் 06 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More