Home இலங்கை கோத்தபாயவை கைது செய்தால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கும்

கோத்தபாயவை கைது செய்தால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை கைது செய்தால் , அரசாங்கம் அரசியல் ரீதியான சவாலகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்நாட்டை காக்கும் தேசிய அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைப்பின் உறுப்பினர் கொம்பந்தல தமித தேரர் மற்றும் இத்தேகந்தே சந்தாதிஸ்ச தேரர் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கோதபாய ராஜாபக்ஷ கைது செய்யப்பட்டால், மகாநாயக்கர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடந்த காலங்களில் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார் எனவும், அதனைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More