Home இலங்கை ராஜபக்ஸக்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்படுகின்றது :

ராஜபக்ஸக்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்படுகின்றது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ராஜபக்ஸக்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் பாரிய தாக்கத்தை செலுத்தினால், அதனை விடவும் சர்;ச்சைக்குரிய ராஜபக்ஸவினரின் மோசடிகள் பற்றி ஏன் விசாரணை எதுவும் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாஜூடீன் கொலை இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவிற்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய தகவல்கள், பிணை முறி மோசடி தொலைபேசி உரையாடல்கள் போன்று வெளியிடப்பட்டால் பல்வேறு உண்மைகள் அம்பலமாகும் எனவும்  மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More