Home இலங்கை வடக்கின் நான்கு மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை

வடக்கின் நான்கு மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. 93 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த 93 உள்ளுராட்சி மன்றங்களில் வடக்கின் நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனு கோரல் தொடர்பில் இன்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More