Home இந்தியா நீர்மூழ்கி கப்பல்கள் 6, தயாரிக்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது:-

நீர்மூழ்கி கப்பல்கள் 6, தயாரிக்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது:-

by admin

அணுஆயுத தாக்குதல் திறன் கொண்ட, 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் திட்டத்தை இந்தியா நேற்று ஆரம்பித்தது . கப்பற்படை தினத்தை முன்னிட்டு,  இது குறித்து டெல்லியில், கருத்து தெரிவித்த   கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா,

அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை கப்பற்படைக்கு கிடைக்கும். என சுனில்  கூறினார்.

குறிப்பாக இந்திய – பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, கடல் பகுதியில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More