Home இலங்கை அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை

அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடக்கில் கடமையாற்றி வரும் படையினரிடம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர்பொதுமக்களுடன் சிறந்த உறவுகளை பேண வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இன நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் படையினரின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென  இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More