Home இந்தியா லட்சத்தீவுகளை புரட்டிப் போட்டது ‘ஒக்கி’ புயல் – 500 கோடி ரூபா சேதம்…

லட்சத்தீவுகளை புரட்டிப் போட்டது ‘ஒக்கி’ புயல் – 500 கோடி ரூபா சேதம்…

by admin

லட்சத்தீவுகளில் ‘ஒக்கி’ புயல்  தாக்கத்தால்   பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட  புயல் சேதம் 500 கோடி ரூபாவுக்கு மேல்  என கணிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து கருத்து வெளியிட்ட  லட்சத்தீவுகள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் (தேசியவாத காங்கிரஸ்) , “லட்சத்தீவுகளில் மினிகாய், கல்பேனி, கவரட்டி தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் விழுந்துள்ளன. கவரட்டியில் கடல் தண்ணீரை குடிநீராக்கும் ஆலை பாதித்துள்ளது.அந்த வகையில்  500 கோடி ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

“விவசாயிகளுக்கு மழையாலும், சூறாவளி காற்றாலும் பெருத்த பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். படகு போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளது. சுமார் 10 படகுகள் மூழ்கி உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More