Home இலங்கை ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாலித ரங்கே பண்டார குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவிப்பு

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாலித ரங்கே பண்டார குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து அமைச்சர் பாலித ரங்கே பண்டார குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிசொகுசு மோட்டார் வாகனம் ஒன்றை விற்பனை செய்வதாகக் கூறி 54 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பாலித ரங்கே பண்டார மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாலித ரங்கே பண்டார குற்றமற்றவர் எனவும் அவரை விடுப்பவதாகவும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இன்று அறிவித்துள்ளார். இந்த வழக்குத் தொடர்பிலான மனுதாரர்களுக்கும் பிரதிவாதிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் வழக்கு விசாரணைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More